சிம்பாப்வே அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று (11) நடைபெறவுள்ளது.
குறித்த போட்டியானது, கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது.
இந்த நிலையில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவுசெய்துள்ளது.
போட்டியின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
இறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றியைப் பெற்றுக்கொள்ளுமா என கிரிக்கெட் இரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.
இதேவேளை, ஆர்.பிரேமதாச மைதானத்தின் C மற்றும் D வலயங்களில் இன்று நடைபெறும் போட்டியை பார்வையாளர்கள் இலவசமாக பார்க்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.