ஜப்பானின் மேற்கு கடற்கரை பகுதியான ஹோன்ஷூவில் மீண்டும் பலமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 2.29 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகி உள்ளது.
இந்த நிலநடுக்கமானது ஹோன்ஷூவின் மேற்கு கடற்கரை அருகே 46 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. எனினும், இதுவரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
ஜப்பானில் புத்தாண்டு தினத்தன்று நேரிட்ட பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. 7.6 ரிக்டர் அளவிலும் அடுத்தடுத்து 20 க்கும் மேற்பட்ட சிறிய அளவிலுமான நிலநடுக்கங்கள் பதிவாகியிருந்தன.
இதன்போது, 200 பேர் உயிரிழந்ததுடன், 559 பேர் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.