By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: காரைநகர்- ஊர்காவற்துறை பாதைச் சேவை பாதிப்பு, கண்டுகொள்ளாத வீதி அபிவிருத்தி அதிகாரசபை!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

காரைநகர்- ஊர்காவற்துறை பாதைச் சேவை பாதிப்பு, கண்டுகொள்ளாத வீதி அபிவிருத்தி அதிகாரசபை!

Published February 13, 2022
Share
1 Min Read
SHARE

காரைநகர்- ஊர்காவற்துறை பாதைச் சேவை பாதிப்பு, கண்டுகொள்ளாத வீதி அபிவிருத்தி அதிகாரசபை!

காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையிலான பாதைச் சேவை கடந்த சில தினங்களாக இடம்பெறாமையால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். குறிப்பாக ஊர்காவற்றுறை பிரதேச செயலகம், ஊர்காவற்துறை நீதிமன்றம், ஊர்காவற்துறை ஆதார மருத்துவமனை ஆகியவற்றில் பணியாற்றும் அரசு ஊழியர்களும், பொதுமக்களும் இவ்வாறு சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

பாதை வெளியிணைப்பு இயந்திரம் பழுதடைந்துள்ளமையால் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனினும் கடந்த காலங்களில் இவ்வாறான பழுதுகள் உடனடியாக சரி செய்யப்பட்டு போக்குவரத்து முன்னெடுக்கப்பட்ட போதும் கடந்த சில தினங்களாக பாதைச் சேவையை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

அரச உத்தியோகத்தர்களும், பொதுமக்களும் தற்காலிகமாக ஒழுங்குபடுத்தப்பட்ட மோட்டார் படகில் ஆபத்துக்களுக்கு மத்தியில் தினமும் பயணம் செய்கின்றனர். இதன்போது படகில் மோட்டார் சைக்கிள்களை ஏற்றி இறக்குவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

பாதைச் சேவையை சீராக நடாத்துவதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TAGGED: கண்டுகொள்ளாத வீதி அபிவிருத்தி அதிகாரசபை, காரைநகர்- ஊர்காவற்துறை பாதைச் சேவை பாதிப்பு
AdminWEB February 13, 2022 February 13, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article தனங்கிளப்பு காற்றாலையில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!
Next Article ‘ஈஸ்டர் தாக்குதல்’ விசாரணை அதிகாரி நாட்டைவிட்டு தப்பியோட்டம்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

மக்கள் குரல்

துடியன் ஏதோ சொல்லப்போறான்

January 28, 2024
மக்கள் குரல்

துடியன் ஏதோ சொல்லப்போறான்

January 27, 2024
மக்கள் குரல்யாழ்ப்பாணம்

“துடியன்” ஏதோ சொல்லப்போறான்

January 26, 2024

கரவெட்டி பிரதேச சபை அசமந்தம்! நெல்லியடியில் பெண்கள் பயணிகள் அசெளகரியம்!

September 14, 2022
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?