By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: “ஆயிரமாயிரம் உயிர்களை இந்த மண்ணில் விதைத்திருக்கின்றோம்”-சிறிதரன்
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

“ஆயிரமாயிரம் உயிர்களை இந்த மண்ணில் விதைத்திருக்கின்றோம்”-சிறிதரன்

Published April 29, 2022
Share
3 Min Read
SHARE

இலங்கைத் தீவில் தமிழர்களாகிய  நாங்கள் நாங்களாக வாழுகின்ற உரிமை  இருக்கின்றது என்பதை சிங்கள தேசம் உணர்ந்து கொண்டால் மாத்திரமே பொருளாதாரத்திலும் அரசியலிலும் வெற்றி காண முடியும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி வட்டக்கச்சி இராமநாதபுரம் மேற்கு அ.த.க பாடசாலையின் மறைந்த முன்னாள் அதிபர் திரு கனகராஜா மகேந்திரராஜா அவர்களது நினைவு நிகழ்வும் பொற்கால மலர் என்ற நூல் வெளியீட்டு விழாவில்  இன்று(29) பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தென்பகுதியில் சிங்கள மக்கள் தெருக்களில் இறங்கிப் போராடுகிறார்கள். பச்சிளம் பாலகர்கள் கூட இறங்கிப் போராடுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் உங்களுடைய பங்கு என்ன என்று என்னிடம் ஒருவர் கேட்டிருந்தார்.

எங்கள் உறவுகள் தங்களுடைய கணவன்மாரை ஒப்படைத்த எங்களுடைய சகோதரிகள், தாய்மார்கள் தங்களுடைய தன்னுடைய கணவன் வருவான் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள் அவர்களுக்கு இந்த சிங்கள சகோதர சகோதரிகளால் பதில் கூற முடியுமா என்று கேட்டிருந்தேன்.

ஆயிரமாயிரம் மனித உயிர்களை நாங்கள் இந்த மண்ணில் விதைத்திருக்கின்றோம்

சிங்கக் கொடியின் கீழ் எங்களையும் ஏற்று அரவணைக்கும் எண்ணத்தை சிங்கள சகோதர்ர்கள் கொண்டுள்ளார்களா? அல்லது எங்களையும் இந்த நாட்டினுடைய பிரதிகளாக சிங்கள மக்கள் ஏற்றுள்ளார்களா ? அதை கூட வெளிப்படையாகச் சொல்லுகின்ற ஆற்றல் ஒரு சிங்கள சகோதரர்களுக்கு அல்லது சகோதரிக்கு ஏன் இன்னும் வரவில்லை, தமிழர்களுடைய வரலாற்று தாயகம் வடக்கு கிழக்கு என்று சொல்வதற்கு ஏன் இன்னும் ஒரு சிங்களச் சகோதரர்களால் முடியவில்லை.

அதனால் தான் நாங்கள் இன்றும் அந்த போராட்டத்திற்கான எண்ணங்களை கொண்டிருக்கவில்லை. அமெரிக்க அரசு கூட  நான்கு நாட்களுக்கு மேலாக யாழ்ப்பாணத்திலிருந்து இதனை ஆய்வு செய்கிறார்கள், ஏன் தமிழர்கள் போராடவில்லை என்று பல நாடுகள் கேட்கின்றன.

நாங்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்ட போது யாரும் கேட்கவில்லை

இன்று ஒரு மனிதன் கொல்லப்படுகின்ற போது கேட்கின்ற உலகம்  ஆயிரக்கணக்காக  தமிழர்கள்  கொல்லப்பட்ட போதும் யாரும் பேசவில்லை, கிளிநொச்சியில் ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலக அதிகாரிகளை எமது மக்கள் இந்த இடத்திலிருந்து செல்ல வேண்டாம் என்று கேட்டிருந்தார்கள் ஆனால் அவர்கள் சென்றார்கள். நாங்கள் கொத்துக்கொத்தாக  கொலை செய்யப்பட்ட  வரலாறுகள் எங்கள் முன்னால் இருக்கின்றது.

இன்று போராட்டத்தில் ஈடுபடும் தென்பகுதி சிங்கள இளைஞர்கள் தமிழ் மக்களுக்கு எதை சொல்கின்றனர், போராட்டத்தில் ஈடுபடும் ஒரு பகுதியினர் சொல்லுகின்றார்கள் இது ஒரு சிங்கள பௌத்த நாடு என்றும் அதனை நாங்கள் நிராகரிக்க மாட்டோம் என்றும் அதற்குள்ளிருந்து தான் நாங்கள் போராடுகின்றோம் என்று குறிப்பிடுகின்றார்கள்.

மகாவம்சத்தில் ஊறிப்போன நீங்கள் இந்த பௌத்த சிங்கள பேரினவாத கொள்கையோடு போராடினால் உங்களுடன் நாங்கள் சேர்ந்து போராட முடியுமா?

நாங்கள் எத்தனையோ ஆண்டுகள் இந்த மண்ணிலே நசுக்கப்பட்டவர்கள், மீண்டும் மீண்டும் சாம்பலிலே இருந்து எழும் ஒரு இனமாக எங்களிடம் இருந்த திறமைகளுடன் இந்த மண்ணில் காலூன்றி இருக்கின்றோம், நாங்கள் இந்த பொருளாதார தடைகள், ஆயிரம் ரூபாவுக்கு பெட்ரோல், மண்ணெண்ணெய் வாங்கி அதனை சிக்கனமாக வைத்து வாழ பழகி பக்குவப்பட்டவர்கள்.

விஜயனின் வருகைக்கு முன்னரே நாங்கள் இங்கே  வாழ்ந்த இனம், ஆகவே நாங்கள் இந்த மண்ணின்  பூர்வீகக் குடிகள், இன்று நாங்கள் எங்கள் இறைமையை இழந்து, சுதந்திரத்தை இழந்து,  அடிமைகளாக எங்களைச் சுற்றி ஒரு ராணுவ வேலிக்குள், ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

நாங்கள் நாங்களாக இந்த மண்ணிலேயே வாழுகின்ற உரிமையும்  நீங்கள் நீங்களாக வாழுகின்ற உரிமையும் இருக்கின்றது என்பதை நீங்கள் எப்போது வெளிப்படையாகப் பேச ஆரம்பிக்கும் போதோ அல்லது அதை எப்போது  ஏற்றுக்கொள்ள துணிகின்றீர்களோ அப்போதுதான் இந்த நாட்டினுடைய பொருளாதாரம் அரசியல் முன்னேற்றம் என்பது சாதாரணமானதாக மாறும், என்றார்.

TAGGED: கிளிநொச்சி, சிறிதரன்
oira8 April 29, 2022 April 29, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு (வீடியோ)!
Next Article அரசியல்வாதி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியின் சடலம் மீட்பு!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்கிளிநொச்சி

கிளிநொச்சியில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்புமனு தாக்கல்!

March 25, 2025
Uncategorized

கைதிகளை பார்வையிட அனுமதி!

December 25, 2024
Uncategorized

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையத்தளம் ஹேக்!

December 4, 2024
Uncategorized

உரிமை அரசியல் பற்றியே அதிகம் பேசியுள்ளேன் : வேலுகுமார்!

November 25, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?