By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஐ.நா உறுப்பு நாடுகள் ஆதரவு வழங்க வேண்டும்_சர்வதேச மன்னிப்புச் சபை!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஐ.நா உறுப்பு நாடுகள் ஆதரவு வழங்க வேண்டும்_சர்வதேச மன்னிப்புச் சபை!

Published September 11, 2022
Share
2 Min Read
SHARE

இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு

ஐ.நாவின் உறுப்பு நாடுகள்
ஆதரவு வழங்க வேண்டும்!

– சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் அமர்வு நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பில் வெளிப்படுத்திய பொறுப்புக்கூறல் திட்டத்தை – உலகளாவிய நியாயாதிக்கப் பிரயோகத்தை முன்னெடுக்க வேண்டும் என்று சபையின் உறுப்பு நாடுகளை சர்வதேச மன்னிப்புச் சபை பகிரங்கமாகக் கோரியுள்ளது.

அத்துடன் தற்போதைய நெருக்கடியின் மையத்தில் உள்ள மனித உரிமைகள் தொடர்பான நிலைமைகளைக் கண்காணிப்பதற்கும், அறிக்கையிடுவதற்கும், பரிந்துரைகளை வழங்குவதற்கும் இலங்கை தொடர்பான நிபுணர் பொறிமுறையை அமைக்க வேண்டும் என்றும் மன்னிப்புச் சபை கோரியுள்ளது.

இலங்கை கடுமையான அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இலங்கையில் தண்டனையின்மை என்பது சட்டத்தின் ஆட்சி, நல்லிணக்கம், நிலையான அபிவிருத்தி என்பவற்றுக்கு மையத்தடையாக உள்ளது.

போர் முடிவடைந்து பதின்மூன்று வருடங்கள் கடந்த போதும், ஆட்சிக்கு வரும் அரசுகள், மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு பயனுள்ள நிலைமாறுகால நீதி செயல்முறையைத் தொடரத் தவறி வருகின்றன.

போர்க்குற்றவாளிகள் என்று கூறப்படுபவர்களுக்கு அரச பதவிகள் மற்றும் வெகுமதிகளை வழங்கியது. காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் மற்றும் அலுவலகம் போன்ற உள்நாட்டு நிலைமாற்று நீதி அமைப்புகள், இழப்பீடுகள் பெரும்பாலும் பொருத்தமற்றதாகிவிட்டன. அத்துடன் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் நம்பிக்கையை இழந்துவிட்டன.

இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து சர்வதேச கண்காணிப்பு மற்றும் அறிக்கையிடல் மிகவும் முக்கியமானது.

இந்தநிலையில் மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் திட்டத்தை பலப்படுத்துவதற்காக இலங்கை மீதான பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு உறுப்பு நாடுகளை மன்னிப்புச் சபை கோரியுள்ளது.

அத்துடன் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்து, அதன் பயன்பாட்டுக்கு உடனடித் தடை விதிக்க வேண்டும். இடைப்பட்ட காலத்தில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அமைதியான போராட்டக்காரர்கள் மீதான அடக்குமுறையை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும்.

அத்துடன் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சட்டத்தை உடனடியாக ஏற்றுக்கொண்டு அதை முழுமையாக செயற்படுத்தவேண்டும் என்பதை இலங்கையிடம் வலியுறுத்த வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை, ஐ.நா. மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகளிடம் கோரியுள்ளது.

TAGGED: இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஐ.நாவின் உறுப்பு நாடுகள் ஆதரவு வழங்க வேண்டும்_சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை!
oira8 September 11, 2022 September 11, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article உங்கள் வீட்டிலும் மஹாலக்ஷ்மி கடாட்சம் பெருக வேண்டுமா!
Next Article சுருட்டு புகைப்பதற்க்காக மூட்டிய தீயில் எரிந்து மூதாட்டி மரணம்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

உலகச் செய்திகள்

ரஷ்யாவின் நிலைப்பாடு ஏற்க இயலாதது – ட்ரம்புடன் பேசிய பிறகு மேற்கத்திய தலைவர்கள் கண்டனம்!

May 16, 2025
இலங்கைச் செய்திகள்உலகச் செய்திகள்

ராஜபக்சர்களை கடுமையாக விமர்சிக்கும் பிராம்ப்டன் மேயர் பெட்ரிக் பிரவுன்!

May 15, 2025
Breaking newsஇலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அகழ்வுப் பணிகள் தொடக்கம் – ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

May 15, 2025
Anita Anand Canada foreign minister oath on Bhagavad Gita
உலகச் செய்திகள்

கனடாவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக அனிதா ஆனந்த் நியமனம்!

May 14, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?