இலங்கை – இந்திய கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்: கட்டணம் எவ்வளவு தெரியுமா!
காங்கேசன்துறை -நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் ஆரம்பிக்கும் இந்த சேவையில், இறுதியாக பயணிகள் சேவையில் ஈடுபட்ட ‘செரியாபானி’ கப்பல் ஈடுபடாது எனவும் சிவகங்கை என்ற கப்பலே அந்த சேவையில் ஈடுபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை கப்பலானது பெப்ரவரி முதலாம் திகதி காலை 8 மணிக்கு நாகப்பட்டினத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்து நான்கு மணி நேர பயணத்தின் பின்னர் காங்கேசன்துறையை வந்தடையும் என கப்பல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சோமசுந்தரம் நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளார் .
இந்த கப்பலில் 150 பயணிகள் பயணிக்கமுடியும் என தெரிவித்த அவர் ஒரு பயணி 60 கிலோவினை கொண்டு செல்லமுடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த சேவையில் ஒரு வழிப் பயணத்துக்கு 80 அமெரிக்க டொலர், அதாவது 6 ஆயிரத்து 600 இந்திய ரூபாய், இலங்கை ரூபாவாக 26 ஆயிரம் அறவிடப்படவுள்ளது.