திருக்கேதீச்சரத்தில் சிறுவன் பரிதாப மரணம்!
நேற்று இரவு உயிலங்குளம் திருக்கேதீஸ்வரம்- பாலாவி ஏரியில் மூழ்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வவுனியா பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த கௌசிகன் ரித்திஸ் எனும் ஒன்பது வயதுச் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிலங்குளம் திருக்கேதீஸ்வரம் கோவிலில் இடம்பெற்ற சிவராத்திரி திருவிழாவைக் காண சென்ற சிறுவன் மக்கள் குழுவுடன் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை உயிலங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.