By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: நெடுந்தீவு ஐவர் படுகொலை சந்தேகநபர் கைது!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

நெடுந்தீவு ஐவர் படுகொலை சந்தேகநபர் கைது!

Published April 23, 2023
Share
2 Min Read
SHARE

 

நெடுந்தீவு ஐவர் படுகொலை சந்தேகநபர் கைது!

நெடுந்தீவில் ஐவர் கோரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பத்துடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தின் அடிப்படையில் ஊர்காவற்துறை  பொலிஸாரால் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் ஜேர்மனியில் இருந்து திருப்பி அனுப்பட்டவர் எனவும் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர் படுகொலை செய்யப்பட்டவர்களின் வீட்டில் தங்கியிருந்தவர் எனவும் அவர் புங்குடுதீவினை சேர்ந்தவர் எனவும் தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது
நெடுந்தீவு மாவலி இறங்கு துறையிலுள்ள கடற்படை முகாமுக்கு அருகில் வீட்டில் வசிக்கும் மூதாட்டியொருவர் நெடுந்தீவுக்கு செல்வோருக்கு தங்குமிட வசதிகளை வழங்குதல் ,உணவு வழங்குதல் போன்றவற்றை தொழிலாக செய்து வந்துள்ளார்.

இவரது கணவர் 1986ஆம் ஆண்டு குமுதினி படுகொலையின் போது படுகொலை செய்யப்பட்ட பின்னர் குறித்த மூதாட்டி தனது வாழ்வாதாரத்தை தானே கொண்டு நடாத்தி வந்துள்ளார்.

நெடுந்தீவில் உள்ள ஆலய மகா கும்பாபிஷேகத்திற்கு யாழ்ப்பாணம் , முல்லைத்தீவு மற்றும் புலம்பெயர் நாடொன்றில் இருந்து வந்திருந்த ஐவர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நெடுந்தீவு சென்று இறங்குதுறைக்கு அருகில் உள்ள குறித்த மூதாட்டியின் வீட்டில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த வீட்டில் இருந்து நேற்றைய தினம் சனிக்கிழமை காலை எவரும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அயலவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்த போது  ஐவர் சடலங்களாக காணப்பட்டுள்ளனர்.

வீட்டின் சற்று தூரத்தில் முன் பகுதியில் கடற்படை முகாம் அமைந்துள்ளமையால் , வீட்டின் பின் பகுதி ஊடாகவே கும்பல் வீட்டினுள் புகுந்து இருக்கலாம் எனவும் , வாள்கள் மற்றும் கோடாரி போன்ற பயங்கர ஆயுதங்களை கொண்டே கொலை செய்யப்பட்டுள்ளதாக  ஆரம்ப  விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

வீட்டிலிருந்த ஐந்து பேர் கொல்லப்பட்ட நிலையில் மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் உள்ளதால்  கொள்ளையிடுவதற்காக படுகொலை நிகழ்ந்ததா அல்லது வேறு எதுவும் காரணமா என கண்டறிய முடியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள மேலதிக பொலிஸார் வருவிக்கப்பட்டு விசாரணைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

TAGGED: நெடுந்தீவு ஐவர் படுகொலை சந்தேகநபர் கைது!
AdminWEB April 23, 2023 April 23, 2023
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article யாழ் வர்த்தகர்களிற்கெதிராக கடுமையான சட்டநடவடிக்கை!
Next Article நெடுந்தீவு படுகொலை சந்தேகநபர்  பகீர் வாக்குமூலம்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

உடுவில் பகுதியில் இனப்படுகொலை நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!

May 18, 2025
இலங்கைச் செய்திகள்செய்திகள்

ஹெரோயின் கடத்தல் வழக்கில் மூன்று பேருக்கு மரண தண்டனை!

May 16, 2025
இலங்கைச் செய்திகள்

யாழில் ஆசிரியரின் மோசமான செயல்!

May 15, 2025
இலங்கைச் செய்திகள்குற்றம்செய்திகள்

சமூக ஊடகத்தில் மாணவியின் புகைப்படத்தை பகிர்ந்த மாணவருக்கு அபராதம் மற்றும் இழப்பீடு

May 15, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?