எட்டு வயதுச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 14 வயதுச் சிறுவன் யாழில் கைது!
யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புத்தூர் கலைமதி ஹிந்து சிட்டி பகுதியில் மாணவியான எட்டு வயதுச் சிறுமி 14 வயதுச் சிறுவனால் துஷ்பிரயோகம்.
சிறுமியின் பெற்றோர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபரான சிறுவன் கைதுசெய்யப்பட்டுள்ளான்.
குறித்த சிறுவனை அரச நன்னடத்தை பாடசாலையில் தடுத்துவைக்க யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளது.