சிரியாவில் இஸ்ரேல் நேற்று (29) நடத்திய வான்வழித் தாக்குதலில் 44 பேர் உயிரிழந்துள்ளனர்.
சிரியாவின் வடக்கு நகரமான அலெப்போவில் லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினரை இலக்கு வைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
அலெப்போ சா்வதேச விமான நிலையத்திற்கு அருகே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டதில் 44 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.
அவா்களில் 36 போ் சிரியா இராணுவத்தினா் எனவும் 7 போ் ஹிஸ்புல்லா படையினா் எனவும் ஒருவா் மற்றோா் ஈரான் ஆதரவு ஆயுதக் குழுவைச் சோ்ந்தவா் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.