தங்கொடுவ, கட்டுகெந்த பிரதேசத்தில் வீடு ஒன்றில் பெண் ஒருவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இக்கொலை நேற்று (31) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கட்டுகெந்த – தங்கொடுவ பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடைய ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த பெண் தனது மகனுடன் கட்டுகெந்த பிரதேசத்தில் உள்ள ஓடு தொழிற்சாலைக்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்தார்.
நேற்று (31) காலை அவரது மகன் வீட்டை விட்டுச் சென்றிருந்த நிலையில், மாலையில் தாயாரைத் தேடி வீட்டுக்கு வந்து பார்த்தபோது, அறையில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
பின்னர் இதுகுறித்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன், தங்கொடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.