By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: முதலாளியை தங்க வைத்த மனைவி; ஆவேசத்தில் வீட்டுக்கு தீ வைத்த கணவன்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

முதலாளியை தங்க வைத்த மனைவி; ஆவேசத்தில் வீட்டுக்கு தீ வைத்த கணவன்!

Published April 1, 2024
Share
1 Min Read
SHARE

குவைட்டில் பணிபுரிந்த பெண்ணொருவர் தனது முதலாளி மற்றும் சாரதியுடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வந்துள்ளார். அவ்விருவரும் அந்த பெண்ணின் வீட்டிலேயே தங்கியும் உள்ளனர்.

இதனால், மனைவிக்கும் கணவனுக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டது. கடும் சண்டையும் ஏற்பட்டுள்ளது. பொறுமை இழந்த கணவன், மனைவியை தாக்கியுள்ளார். சனிக்கிழமை (30) வீட்டிற்கு தீ வைத்துள்ளார்.

இந்த சம்பவத்தில் குவைட் முதலாளி, அவருடைய சாரதி கடும் தீக்காயங்களுக்கு உள்ளாகினர். சம்பவத்தில் தீக்காயங்களுக்கு உள்ளான கணவரின் தந்தை மரணமடைந்துள்ளார்.

இந்த சம்பவம், பிபில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு வீதி, வெலிபோதாய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

சுமார் 40 வயதுடைய இந்தப் பெண், குவைத்தில் பணிபுரிந்து வந்த தனது முதலாளியான 80 வயதான அப்துல் சைட் ஆலபல்லாயன் மற்றும் அவரது சாரதி கே.கே.நாமல் ஆகியோருடன் வீடு திரும்பியுள்ளார்.

இதற்கு முன் பலமுறை அவ்விருவருடன் வீட்டுக்கு வந்துள்ளார். இதுகுறித்து கணவன்-மனைவி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் சனிக்கிழமை (30) கடும் கோபமடைந்த கணவன், மனைவியை தாக்கி அவருடன் வந்த குவைத் நாட்டவர் மற்றும் சாரதியைத் தாக்கி வீட்டிற்கு தீ வைத்துள்ளார்.

குவைத் நாட்டைச் சேர்ந்தவர், சாரதி ஆகியோர் காயமடைந்த நிலையில், பிபில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அங்கிருந்த 70 வயது சுகயீனமடைந்திருந்த கணவரின் தந்தை தீக்காயங்களுக்குள்ளான நிலையில் பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணை பிபில பதில் நீதவான் திரு.சரத் பண்டாரவினால் மேற்கொள்ளப்பட்டதுடன், பிரேத பரிசோதனை மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் திங்கட்கிழமை (01) நடைபெறவிருந்தது.

கணவன் தான் வீட்டுக்கு தீ வைத்தாரா என பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். குவைட் நாட்டைச் சேர்ந்தவரை விசாரிப்பதற்கு மொழிபெயர்ப்பாளரின் உதவி பெறப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

TAGGED: மட்டக்களப்பு, வெலிபோதாய
Editor S.Shanuja April 1, 2024 April 1, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article கழுத்து நெரிக்கப்பட்டு பெண் கொலை!
Next Article முட்டை 35 ரூபாவானால் கேக் 100 ரூபாவால் குறையும்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

இலங்கைச் செய்திகள்செய்திகள்

முன்னாள் கடற்படைத் தளபதியை கைதுசெய்த CID!

July 28, 2025
இலங்கைச் செய்திகள்கிளிநொச்சி

கிளிநொச்சி யாழ் பல்கலை பாதுகாவலர் சடலமாக மீட்பு: விசாரணை தீவிரம்!

July 28, 2025
இலங்கைச் செய்திகள்

பிரபல பெண்கள் பாடசாலை மாணவிகள் போதை மாத்திரை உட்கொண்ட நிலையில் கைது!

July 28, 2025
இலங்கைச் செய்திகள்கிழக்கு மாகாணம்

இனியபாரதியின் மற்றொரு சகா கைது – CID விசாரணைகள் தீவிரம்!

July 28, 2025
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?