By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
PuthujugamPuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • முக்கிய செய்தி
      • வடக்கு மாகாணம்
        • யாழ்ப்பாணம்
        • முல்லைத்தீவு
        • வவுனியா
        • மன்னார்
      • கிழக்கு மாகாணம்
    • உலகச் செய்திகள்
      • புலம்பெயர் தமிழர்கள்
      • இந்திய செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Reading: பிரபாகரன் எங்கே! உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதை வரலாறு கூறும்!
Share
Notification Show More
PuthujugamPuthujugam
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
    • உலகச் செய்திகள்
  • ஆன்மீகம்
  • அறிவியல்
    • பயனுள்ள தகவல்கள்
    • நம்மவர் படைப்புகள்
    • மருத்துவ குறிப்புகள்
    • அழகு குறிப்புகள்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • நேர்காணல்
    • கட்டுரை
  • அரசியல்
    • குற்றம்
    • மக்கள் குரல்
    • துயர் பகிர்தல்
  • Contact
Follow US
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள

பிரபாகரன் எங்கே! உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதை வரலாறு கூறும்!

Published February 22, 2022
Share
3 Min Read
SHARE

பிரபாகரன் எங்கே! உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதை வரலாறு கூறும்!

பிரபாகரன் கொல்லப்பட்டிருந்தால் எதற்காக பிரபாகரனின் தாயாரிடம் “பிரபாகரன் எங்கிருக்கிறார்” என விசாரணை செய்தீர்கள் என்பதற்கான பதிலையும் கூறவேண்டும். அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு பிரபாகரனின் தாயார் இதனைக் கூறியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சாவு தொடர்பில் அரசும், அரசில் உள்ளவர்களும் மாறுபட்ட கருத்துக்களைக் கூறி வருகிறார்கள்.

இதன் மூலம் போர்க் குற்றம் நடந்தது என்பதை ஏற்றுக் கொள்கிறார்கள். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பண்பு தெரியாத வகையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி வசைபாடியுள்ளார்.என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம் கே சிவாஜிலிங்கம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:-

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியான ஈபிடிபி பற்றி பொது மக்களுக்கு நன்றாகத் தெரியும். அவர் எவ்வளவு படுகொலைகள், அட்டூழியங்கள் புரிந்தார் என்பதும் தெரியும். 2001 ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் பரப்புரைக்காக ஊர்காவல்துறை சென்றபோது ஈபிடிபி குண்டர்களால் சுட்டும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மூவருக்கு இரட்டை சாவுத் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது.

பிரபாகரன் உயிருடன் சரணடைந்தார் என்று டக்ளஸ் தேவானந்தா கூறுகிறார். அப்படியென்றால் சரணடைந்தவர்களை நீங்கள் படுகொலை செய்திர்களா? என்பதற்கு பதில் கூறவேண்டும். இறுதிப் போரின்போது பிரபாகரன் என காண்பிக்கப்பட்ட படத்தில் நெற்றியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருந்ததை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

சரணடைந்திருந்தால் விசாரணை செய்திருப்பீர்கள் இலங்கை முழுவதும் பவனியாக கொண்டு சென்றிருப்பீர்கள். ஆனால் தற்போது இந்த விடயங்கள் தொடர்பில் ஒன்றுக்கொன்று முரணாகவே கூறி வருகிறீர்கள். சரணடைந்த பின்னர் கொல்லப்பட்டார் என்பது உங்கள் கருத்து. அவ்வாறு என்றால் இந்த போர்க் குற்றத்திற்கு யார் பொறுப்பு? இதற்கு யார் பதில் கூறுவது.

அன்று இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா “பிரபாகரன் ஒரு வீரன், கடைசி வரை போராடி மறைந்தார் என்பதைக் கூறுகின்றார். ஓய்வு நிலை ஜெனரல் கமால் குணரட்ண என்பவர் பிரபாகரனின் கழுத்தில் இருந்த இலக்கம் ஒன்று என்ற இலக்கத் தகட்டையும் பிஸ்ரலையும் கைப்பற்றினோம் எனக் கூறியுள்ளார். அவ்வாறு என்றால் பிஸ்ரலுடனா  சரணடைந்தார்.

அவருடைய உடலை நாங்கள் புதைத்து விட்டோம் என ஒரு சிலர் கூறினார்கள். எங்கு புதைத்தோம், யார் புதைத்தது என்பது கூறப்படவில்லை. இன்னுமொரு பகுதியினர் எரித்துவிட்டு சாம்பலைக் கரைத்து விட்டோம் என்றனர். பிரபாகரனின் உடலை அடையாளம் காண்பதற்காக கருணாவையும், தயா மாஸ்டரையும் கூட்டிச் சென்றார்கள். உலங்குவானூர்தியில் கருணாவை கூட்டிச் செல்ல முடியும் என்றால் ஏன் சட்ட மருத்துவ அதிகாரியை கூட்டிச்சென்று மரண சான்றிதழ் வழங்கவில்லை.

ஒருவர் கொல்லப்பட்டால் குறித்த நபர் இந்தியாவாலும் தேடப்படும் கிறார் என்றால் ஏன் அவரின் இறப்பு விசாரணை நடைபெறவில்லை. இந்தியாவுக்கு ஒரு நீதிமன்றச் சான்றிதழை வழங்கியுள்ளீர்கள். அன்றைய காலத்தில் பிரபாகரனின் தாயும், தந்தையும் பனாகொட  இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். அப்படியென்றால் ஏன் டிஎன்ஏ பரிசோதனை செய்யவில்லை. பிரபாகரன் என காண்பிக்கப்பட்ட உடலை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

ஒன்றில் அவர் தன்னைத் தானே மாய்த்திருக்க வேண்டும். அல்லது அவர் உயிருடன் இருக்கின்றாரா? இல்லையா? என்பதை வரலாறு கூறும். அதனை விடுத்து சரணடைந்தார்,சடலத்தை எடுத்தோம்,புதைத்தோம் என்று கூறுவதில் அர்த்தமில்லை. பிரபாகரன் கொல்லப்பட்டிருந்தால் எதற்காக பிரபாகரனின் தாயாரிடம் “பிரபாகரன் எங்கே இருக்கிறார்” என விசாரணை செய்தீர்கள் என்பதற்கான பதிலையும் கூற வேண்டும். அல்ஜசீரா தொலைக்காட்சிக்கும் பிரபாகரனின் தயார் இதனைக் கூறியுள்ளார்” என்று தெரிவித்தார்.

TAGGED: சிவாஜிலிங்கம், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர், பிரபாகரன், பிரபாகரன் எங்கே! உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதை வரலாறு கூறும்!
oira8 February 22, 2022 February 22, 2022
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Previous Article தலைவர் பிரபாகரன் எங்கே? பிரபாகரன் எனக் காட்டப்பட்ட சடலத்தை நாம் ஏற்கவில்லை!
Next Article சம்பளத்திற்காக பிச்சை! இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகுதோ யாழ்ப்பாணத்தில்!
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might also Like

Breaking newsஇலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் அகழ்வுப் பணிகள் தொடக்கம் – ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

May 15, 2025
இலங்கைச் செய்திகள்

பிரபாகரனின் பிறந்த நாளை கொண்டாடியவர்களிடம்  விசாரணை!

December 1, 2024
Breaking newsஇலங்கைச் செய்திகள்

சீரற்ற காலநிலையால் பிற்போடப்பட்டது உயர்தரப் பரீட்சை!

November 26, 2024
Breaking newsஇலங்கைச் செய்திகள்யாழ்ப்பாணம்

வடக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அனர்த்த எச்சரிக்கை!

November 26, 2024
Previous Next
2022 - 2050 || All Rights Are Received By புதுயுகம் © || Website Developed by WEBbuilders.lk
  • தமிழ் கதிர்
  • எம்மை தொடர்புகொள்ள
Welcome Back!

Sign in to your account

Lost your password?