எம்.ஜி.ஆர் தமிழ் சினிமாவின் உண்மையான அடையாளமாகவும், தொலைநோக்கு தலைவராகவும் திகழ்ந்தார் என தமிழகத்தின் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் வெளியிட்டுள்ளார்.
எம்.ஜி.ஆரின் 107வது பிறந்தநாளையொட்டி அவரை நினைவுக் கூர்ந்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவை இட்டு இதனைத் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது,
சமூக நீதி கொண்ட அவரது படங்கள் வெள்ளித்திரைக்கு அப்பால் இதயங்களை வென்றன. தலைவராகவும், முதலமைச்சராகவும் மக்கள் நலனுக்காக அயராது உழைத்தவர்
தமிழகத்தின் வளர்ச்சியில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தினார். அவரது பணி தொடர்ந்து நம்மை ஊக்குவிக்கிறது – என்று தனது பதிவில் மோடி புகழ்ந்துள்ளார்.