நீராடச் சென்ற 11 வயதான சிறுவனை முதலை இழுத்துச் சென்றுள்ளது. இந்தச் சம்பவம் கடுவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாந்த அந்தோனி மாவத்தையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சிறுவன் அப்பகுதியில் உள்ள நீரோடையொன்றில் நேற்றைய தினம் நீராடச் சென்றுள்ள நிலையிலேயே முதலை இழுத்துச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுகிறது.
இந்நிலையில், காணாமல் போன சிறுவனை தேடும் பணியில் பொலிஸார், பிரதேசவாசிகள் மற்றும் கடற்படையின் சுழியோடி அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்.