செவ்வாய்க்கிழமை விரதத்தின் மகிமை! ஓம் சரவணபவ!
முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமைகளில் விரதமிருந்து வணங்கிவர காரியத் தடைகள் நீங்கி இன்பமாக வாழலாம்.
கிரகங்களில் மங்களகரமான கிரகம் செவ்வாய். இதனால் தான் மங்களகரமான நிகழ்வுகளை செவ்வாய்க்கிழமை மேற்கொள்கிறோம்.செவ்வாய்க்கிழமை தொடங்கும் காரியங்கள் வெற்றிபெறும்.
நவக்கிரகங்களில் நோய் எதிர்ப்பு சக்தி, தைரியம், நிலம் தொடர்பான சொத்துக்கள், செவ்வாய் தோஷம், சொந்த வீடு ஆகியவற்றின் காரணியாக செவ்வாய் பகவான் இருக்கிறார். இவை தொடர்பில் குறைபாடுகள் உள்ளவர்கள் செவ்வாய் பகவானின் அம்சமான முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமைகளில் விரதமிருந்து வணங்கிவர வேண்டும்.
செவ்வாய்க்கிழமை விரதமிருப்பவர்கள் அதிகாலையில் நீராடி முருகப்பெருமான் கோவிலுக்கு சென்று வணங்க வேண்டும். வீட்டிற்கு திரும்பியதும் பால் அல்லது பழச்சாறு அருந்தி விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், போன்ற முருகப்பெருமானுக்குரிய ஸ்தோத்திரங்கள், மந்திரங்கள், ஆகியவற்றை பாராயணம் செய்ய வேண்டும். மாலை ஆறு மணிக்கு முருகன் கோயிலுக்கு சென்று வணங்கி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
இவ்வாறு 9 செவ்வாய் கிழமைகள் விரதமிருந்து முருகப்பெருமானை வணங்கி வர செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு அதன் தீவிரம் குறைந்து நன்மைகள் உண்டாகும்.
சொந்த வீடு கட்டும் யோகம் உண்டாகும். கோழைத்தனம் பயம் நீங்கி தைரியம் பிறக்கும். உடலில் நோய் எதிர்ப்பாற்றல் உண்டாகும்.
ஓம் சரவணபவ.